
மும்பை: 2022-23 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.15% ஆக உயர்த்தி வழங்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகஸ்டு மாதத்தில் இருந்து இதன் பயனை சந்தாதரர்கள் பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ பிஎஃப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-2023-ஆம் ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. இந்நிலையில், இந்த உயர்வுக்கு நிதி அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதனை ஒட்டி கள அதிகாரிகள் பிஎஃப்தாரர்களின் கணக்குகளில் 8.15 சதவீத கணக்கில் வட்டியை வரவு வைக்குமாறு இபிஎஃப்ஓ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pbCHZ2m
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக