
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வரத்து அதிகரிப்பால் மொத்த வியாபாரிகளிடம் 25 லட்சம் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால், விலை சரிவு ஏற்பட்டதால் தென்னை விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
திருப்புவனம் பகுதியில் அதிகளவில் தென்னைகள் உள்ளன. தேங்காய் நெற்றுகளை விவசாயிகளிடம் இருந்து அங்குள்ள மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பின்னர் மட்டையை உரித்து தேங்காய்களை தமிழகம் மட்டுமின்றி குஜராத், மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தாண்டு தமிழகம் முழுவதும் தேங்காய் விளைச்சல் அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/skCDJae
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக