offer for you

ஞாயிறு, 16 ஜூலை, 2023

கனமழையால் வர்த்தகம் பாதிப்பு - வட மாநிலம் செல்லும் 75 ஆயிரம் சரக்கு லாரிகள் நிறுத்தம்

நாமக்கல்: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சி.தன்ராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து ஜவுளி, உணவுப் பொருட்கள் என பல்வேறு சரக்குகள் சாலை மார்க்கமாக லாரிகளில் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதுபோல, வடமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு பொருட்கள் தமிழகம் வருகின்றன. இந்நிலையில், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/msGkpvY
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now