
கரோனா பெருந்தொற்று, அதன்பிறகு உக்ரைன் – ரஷ்யா போர் ஆகிய முக்கிய காரணங்களால் பெரும்பாலான உலக நாடுகள் பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்கா, டாலர் அச்சடித்து மக்களுக்கு கரோனா நிவாரணமாக வழங்கியது. இதன் காரணமாக 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார இறுக்கம் நீங்கவில்லை.
இந்த சூழ்நிலையில், இந்தியா ஒரு பிரகாசமான பொருளாதார சூழ்நிலையில் உள்ளது. காரணம், நமது நாட்டில், 2022-23 நிதியாண்டுக்கான வளர்ச்சி வீதம், 7.2 சதவீதமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர, நமது நாட்டில், இளைய தலைமுறை எண்ணிக்கை மற்றும் திறன்மிக்க மக்கள் வளம் அதிகம் உள்ளது. மேலும், நமது உற்பத்தித் துறையில் புள்ளிவிவரங்கள் வளர்ச்சிக் கணக்கைக் கொடுக்கிறது. நாட்டின் வர்த்தக நிலவரத்தின் கண்ணாடியாக திகழும் ஜிஎஸ்டி வசூல் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VhWGriO
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக