
குன்னூர்: நீலகிரி மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டின் அருகே அமைந்துள்ளது பர்லியாறு அரசு பழப் பண்ணை. இங்கு பழங்களின் அரசி எனப்படும் மங்குஸ்தான், இயற்கை காயகல்பமான துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான், மாதுளை, கொய்யா, பலா, பப்ளிமாஸ், பன்னீர் கொய்யா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் 50,000 பேர் வரை பழப்பண்ணைக்கு வந்து செல்கின்றனர்.
விவசாயிகளுக்குத் தேவையான பாக்கு மர நாற்றுகளும், காபி, கோ-கோ மொட்டு கட்டிய செடிகளும், பல்வேறு பழ, வாசனை திரவிய, மலர் அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் ஒரே சீரான சீதோஷ்ண நிலை நிலவுவதால், நாட்டில் மிக சில இடங்களில் மட்டுமே விளையக் கூடிய துரியன், மங்குஸ்தான், வெண்ணைப் பழம், ரம்பூட்டான் உட்பட பல அரிய வகை மருத்துவ குணமிக்க பழ வகைகள் விளைகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0JpXoeW
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக