
பழநி: திண்டுக்கல் மாவட்டம், தொப்பம் பட்டியில் நடைபெற்ற மாட்டுச் சந்தை களைகட்டியது. இதில், காங்கயம் காளைகள் ரூ.1 லட்சம் வரை விற்பனையானது.
பழநி அடுத்துள்ள தொப்பம்பட்டியில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆண்டு தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தற்போது 61-வது ஆண்டாக சந்தை ஆக.1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் 750 காங்கயம் மாடுகளை விற்பனை செய்ய கொண்டுவந்துள்ளனர். மாட்டின் பற்களை கணக்கிட்டும், சுழியை வைத்தும் விற்பனை நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IfznNR1
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக