offer for you

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி விவகாரம்: வீட்டை எழுதி தர கோரி தீபக் கோச்சார் மிரட்டல் - சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி விவகாரத்தில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்திடம் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையை எழுதி தரச்சொல்லி மிரட்டியது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை வாயிலாக தெரியவந்துள்ளது.

ரூ.3,250 கோடி கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும தலைவர் வி.என். தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ 11,000 பக்க குற்றபத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விவகாரம் தொடர்பாக வி.என். தூத் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோருக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cy1NGnX
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now