
புதுடெல்லி: விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த தக்காளி விலை சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான எதிரான போராட்டத்தில் அடுத்தப் பிரச்சினையாக பருப்பு விலை ஏற்றம் இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நடப்பு காரிஃப் பருவத்தில் பருப்பு பயிரிடுதல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பாதியளவாகக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலிவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15 மாதங்கள் இல்லாத அளவில் ஜூலையில் 7.5 சதவீதமாக அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YHB7cUb
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக