
கோவை / திருப்பூர்: மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி நேற்று நடைபெற்ற உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இதனால் மின்வாரியத்துக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். திருப்பூரில் ரூ.150 கோடி மதிப்பில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
நிலை கட்டணத்தை குறைத்தல், உச்ச பயன்பாட்டு நேர மின்கட்டணத்தை நீக்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிறு, குறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ) தொழில்துறையினர் நேற்று ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் கணபதி, இடையர்பாளையம், சிட்கோ உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் அதிகம் செயல்படும் பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MpmPcWX
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக