offer for you

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம: ரூ.1.5 கோடிக்கு விற்பனை இலக்கு; 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி

காஞ்சிபுரம்: கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த ஆண்டு ரூ.16.91 கோடிக்கு சில்லறை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உத்திகளை கையாண்டு அறிய வேலைப்பாடுகளுடன் பட்டு மற்றும் கைத்தறி ரக சேலைகள் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் பருத்தி ரக சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் பல ரகங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு புதிய ரக வரவுகளாக சில்க் லினன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள் (GAATHA), டிசைனர் கலெக் ஷன் போர்வைகள் (GAATHA), காம்பிரே போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியவை விற்பனைக்கு உள்ளதாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aibWBd5
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now