offer for you

திங்கள், 25 செப்டம்பர், 2023

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 34,000 சேமிப்புக் கணக்கு: கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதலிடம்

விருத்தாசலம்: தமிழகத்திலேயே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் 34 ஆயிரம் பயனாளிகளை வாடிக்கையாளர்களாகக் கொண்டு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முதலிடத்தில் உள்ளது. கடலூர் புதுப்பாளையத்தை தலைமையி டமாகக் கொண்டு கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கிக்கு மாவட்டம் முழுவதும் 32 கிளைகள் உள்ளன.

இந்த வங்கிகளில் பல்வேறு தரப்பினர் வாடிக்கையாளராக இணைந்திருந்தாலும், குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுவினர், விவசாயிகள் இந்த வங்கிகளில் பெரும்பான் மையான வாடிக்கையாளர்களாக உள்ளது இதன் சிறப்பு. இதற்கான காரணம் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் இந்த வங்கியில் வாடிக்கையாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு கடனுதவிகளும், நகைக் கடனும் எளிதில் கிடைக்கும் வகையில் நடை முறைப்படுத்தி இருப்பதுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hVwfpeH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now