offer for you

ஞாயிறு, 5 நவம்பர், 2023

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வங்கிகளில் ரூ.5,716 கோடி கடன் பெற்று மோசடி: அமலாக்கத் துறை தகவல்

மும்பை: ஜெட் ஏர்வேஸ் வழக்கில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 8 வங்கிகளிடமிருந்து ரூ.5,716 கோடி கடன் பெற்று சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் மடைமாற்றியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிபதி எம் ஜி தேஷ்பாண்டே, குற்றப்பத் திரிகையை ஆய்வு செய்த பின்னர் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனை சட்டத்துக்குப் புறம்பான வழியில் மடைமாற்றியதை நிரூபிக்கும் ஆதாரங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a5JnpRy
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now