offer for you

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பருத்தியை அதிகளவு வாங்கும் வர்த்தகர்களால் விலை உயர வாய்ப்பு - ஜவுளித் தொழிலில் புதிய கவலை

கோவை: நடப்பாண்டுக்கான பருத்தி ‘பீக் சீசன்’ தொடங்கியுள்ள நிலையில் விலை குறைந்துள்ளது. இருப்பினும் வர்த்தகர்களே அதிகளவு பஞ்சை வாங்கி வருவதால் எதிர்வரும் மாதங்களில் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும் தொழில் முனைவோருக்கு மட்டும் விற்பனை செய்ய இந்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவுளித் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும் பருத்தி சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்தாண்டு செப்டம்பர் வரை இருப்பது வழக்கம். கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான பருத்தி சீசனில் மொத்தம் 336.60 லட்சம் பேல் ( ஒரு பேல் 170 கிலோ ) பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பாண்டு 2023 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 316.57 லட்சம் பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jyQXnNP
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now