
காந்திநகர்: அமெரிக்காவைச் சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி, குஜராத்தில் சனாந்த் நகரில் செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலையை அமைத்து வருகிறது. இந்தியாவில் அமையும் முதல் செமி கண்டக்டர் தயாரிப்பு ஆலை இதுவாகும்.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது: மைக்ரான் அணியின் செயல்பாடு பெரும் நம்பிக்கை தருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் செமி கண்டக்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். செமிகண்டக்டர் தயாரிப்புக்கான மையமாக இந்தியா உருவாக உள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகிலேயே மிகப் பெரியபசுமை எரிஆற்றல் கட்டமைப்பு குஜராத்தில் அமைய உள்ளது. இரண்டாவது, இந்தியாவில் திறன் மிகுந்த மனித வளம் அதிகம் உள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7o5pHRr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக