offer for you

செவ்வாய், 23 ஜனவரி, 2024

தூத்துக்குடியில் தாமதமாகும் உப்பு உற்பத்தி - கூடுதல் செலவால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்த உப்பளங்களை சீரமைத்து, உப்பு உற்பத்திக்கு தயார்படுத்தும் பணிகளை உப்பள உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். சீரமைக்க பல மடங்கு கூடுதல் செலவாகும் என்றும் உப்பு உற்பத்தியும் மூன்று மாதங்கள் வரை தாமதமாகும் எனவும் உப்பள உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/27hRXfV
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now