offer for you

புதன், 24 ஜனவரி, 2024

20 ஏக்கரை ஒப்படைக்காததால் இழுபறி - முதல்வர் கையில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணி!

மதுரை: சர்வதேச விமான நிலையமாக இல்லாமலே மதுரை விமான நிலையம் பயணிகள் வருகை யில் சென்னை, கோவை, திருச்சிக்கு அடுத்து நான்காவது பெரிய விமான நிலையமாகத் திகழ்கிறது. மற்ற விமான நிலையங்களைப் போல் வெளிநாட்டு விமானங்கள், இயக்கப்பட்டால் சென்னைக்கு அடுத்து இரண்டாவது விமான நிலையமாக முன்னேறி விடும். 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பு இன்று வரை வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

திமுக ஆட்சிப் பொறுப் பேற்றதும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விமானநிலைய விரிவாக்கத்துக்கான நிலம் முழுவதையும் தமிழக அரசு கையகப்படுத்தி, அதற்கான பணிகளைத் தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், திமுக ஆட்சிப் பொறுப் பேற்று 2 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் மதுரை விமான நிலையத்துக்கான நிலம் முழுமையாக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு 2009-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9cdtDyn
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now