offer for you

புதன், 24 ஜனவரி, 2024

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வீழும் விசைத்தறி... மீளுமா?

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி சத்தம் என்பது உழைப்பின் சங்கீதமாகவே பார்க்கப்படுகிறது. நள்ளிரவு நேரத்திலும் வானொலியில் பாட்டு கேட்டபடி, குடும்பம், குடும்பமாக தறிகளை இயக்கிக் கொண்டிருந்தவர்கள் தான், விசைத் தறித் தொழிலாளர்கள். இன்றைக்கு அந்த காட்சிகள் அரிதாகிவிட்டன.

பகல் நேரத்திலேயே வேலை இன்றி பல விசைத் தறிக்கூடங்களில், பூச்சிகள் கூடு கட்டும் அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. கரோனா பெருந்தொற்றில் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகளை நம்பி, 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட கூலி விவகாரம், பண மதிப்பு நீக்கம், கரோனா மற்றும் பஞ்சு, நூல் விலை உயர்வு என இன்றைக்கு இந்த தொழில் வீழ்ச்சிக்கான காரணங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றுக்கெல்லாம் உச்சமாக மின் கட்டண உயர்வும், தொழிலாளர்களுக்கான கூலி உயர்வும் இரட்டை ஆயுள் தண்டனைகளாக மாறி இருப்பதாக சொல்கின்றனர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ln5IBEH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now