offer for you

திங்கள், 19 பிப்ரவரி, 2024

10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறலாம்: இணையவழியில் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் கடந்த 1865-ம் ஆண்டுமுதல் பதிவுத்துறையில் பதிவான 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் வழியாகபெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ.25.15 கோடியில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலக கட்டிடங்கள், ரூ.3.62 லட்சம் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகியஇடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZlXq1uc
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now