
பெங்களூரு: அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் சர்வதேச அளவில் விற்பனையங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவிலுருந்தும் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து தயாரிப்புகளைப் பெற்று அவற்றை சர்வதேச அளவில் விற்பனை செய்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் 30 பில்லியன் டாலர் (ரூ.2.5 லட்சம் கோடி) மதிப்பிலான சரக்குகளை இந்தியாவிலிருந்து பெற்றதாக வால்மார்ட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஆண்ட்ரியா ஆல்பிரைட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இந்தியா அதிக வளர்ச்சியைக் கொண்ட சந்தை. இங்கு ஏராளமான சிறு, குறு விநியோகர்கள் உள்ளனர். அவர்களிடமிருந்து பொருள்களைப் பெற்று நாங்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xKfZoW5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக