
நொய்டா: இந்தியா மிகச் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் மைக்கேல் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் மைக்கேல் ஸ்பென்ஸ். நேற்று முன்தினம் நொய்டாவில் உள்ள பென்னட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன், இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு குறித்தும் உலகின் பொருளாதாரப் போக்குக்குறித்தும் அவர் கலந்துரையாடினார். இந்தியாவில் 2016-ம்ஆண்டு யுபிஐ கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது. பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/K2tzQou
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக