offer for you

சனி, 10 பிப்ரவரி, 2024

ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா: தொழில்துறையினர் தகவல்

கோவை: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித் தொழில் துறை திகழ்கிறது.

பருத்தி போன்ற முக்கிய மூலப் பொருட்களின் விலையில் ஸ்திரத்தன்மை இல்லாதது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை இழைகளுக்கு தரக் கட்டுப்பாடு என்ற பெயரில் நெருக்கடி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6bSNz3Y
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now