
கோவை: வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளில் நாடு முழுவதும் சிறப்பான பணியை மேற்கொண்டு வருகிறது கோவையை சேர்ந்த ‘பேர்டுஸ்கேல் டிரோன்’ நிறுவனம்.
தொழில் நகரான கோவையை மையமாக கொண்ட இந்நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசுத் திட்டங்களில் வான்வழி நுண்ணறிவு, தகவல் தரவு பகுப்பாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. உரிய அனுமதி பெற்று செயல்படும் இந்நிறுவனம் அனல் மின்நிலையம், காற்றாலைகள், சூரியஒளி ஆற்றல் மின்உற்பத்தி திட்டங்களின் செயல்பாடுகளை கண்டறிதல், தொழில்துறை சார்ந்த சொத்துகளை வான்வழி ஆய்வு செய்தல், கட்டுமானப் பணிகளின் நிலையை துல்லியமாக கண்டறிதல், வேளாண் துறை மற்றும் வனம் சார்ந்த பகுதிகளில் விலங்குகள் நடமாட்டம் உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், நிலங்களை சிறப்பான முறையில் சர்வே செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lT7kV5c
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக