offer for you

செவ்வாய், 19 மார்ச், 2024

“கோவை வளர்ச்சிக்கு உதவ எப்போதும் தயார்” - தொழில் துறையினரிடம் பிரதமர் மோடி உறுதி

கோவை: கோவையில் நேற்று நடைபெற்ற ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் ( சிஐஐ ) தென்னிந்திய ‘சிஎஸ்ஆர்’ திட்டத்தின் தலைவர் மற்றும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவிசாம், ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், தொழிலதிபர்கள் எஸ்.வி.பாலசுப் ரமணியம், சங்கரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஆர்.வி.ரமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்நிகழ்வு குறித்து ரவிசாம், வனிதா மோகன் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பிரதமரை சந்தித்து பேசிய போது, கோவையில் சர்வதேச விமான போக்கு வரத்து அதிகரித்தல், ஜவுளித்தொழிலில் ஐரோப்பா, இங்கிலாந்து நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தி டுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DazTON6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now