
கோவை: அட்சய திருதியை நாளில் தங்க நகை அல்லது நாணயங்கள் வாங்கினால் ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்தவகையில், அட்சய திருதியை நாளையொட்டி கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் மக்கள் நகைகளை வாங்க நேற்று காலை முதலே ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்த தால் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகை வாங்க கடைகளுக்கு வந்தனர். புதிய வடிவமைப்புகளில் நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eDB7LCQ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக