offer for you

திங்கள், 27 மே, 2024

அனல்மின் நிலையங்களின் தேவைக்காக புதிய நிலக்கரி சுரங்கத்தை வாங்குகிறது தமிழ்நாடு மின்வாரியம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி கிடைப்பதற்காக புதிய நிலக்கரி சுரங்கத்தை வாங்குகிறது.

தமிழ்நாடு மின்வாரியம் தனது அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், உடன்குடி மற்றும் உப்பூர் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி அதிக அளவு தேவைப்படுகிறது. இதற்காக, புதிய நிலக்கரி சுரங்கத்தை தமிழக மின்வாரியம் வாங்க தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் உள்ள சகிகோபால் ககுர்க்கி என்ற புதிய நிலக்கரி சுரங்கரத்தை தமிழக மின்வாரியம் அடுத்த மாதம் வாங்குகிறது. 1,950 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தச் சுரங்கத்தில் 4,500 டன் முதல் 5,200 டன் அளவு வரையிலான நிலக்கரி கிடைக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SFn5MO0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now