
புதுடெல்லி: மக்களவையில் மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், புதிய முறை வருமான வரி விதிப்பு விகிதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விகிதத்தில் நிரந்தர கழிவு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் 2024 25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு. குறு. குறு, சிறு நிறுவனங்கள். நடுத்தர மக்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் வேளாண் உற்பத்தி பெருக்கம். வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு. மனிதவள மேம்பாடு, சமூக நீதி, உற்பத்தி சேவைகள், நகர்ப் புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆராய்ச்சி-அடுத்த தலைமுறைக் சீர்திருத்தங்கள் ஆகிய 9 துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z6o5M0m
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக