offer for you

செவ்வாய், 23 ஜூலை, 2024

100 நகர் பகுதிகளில் தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

புதுடெல்லி: மாநிலங்களுடனும், தனியார் துறையுடனும் இணைந்து 100 நகர் பகுதிகளில், முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய முதலீட்டுக்குத் தயாராக உள்ள தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், "மாநிலங்களுடனும், தனியார் துறையுடனும் இணைந்து 100 நகர் பகுதிகளில், முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய முதலீட்டுக்குத் தயாராக உள்ள தொழில் பூங்காக்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில் பூங்காக்களை உருவாக்க அனுமதி அளிக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7bogRNA
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now