
சென்னை: வரும் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 வரிசை போன்கள் உட்பட ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் நடத்துகின்ற மிகப்பெரிய நிகழ்வாக இது அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்வின் நேரம் குறித்த தகவல் வெளியாகவில்லை. வரும் செப்.20-ம் தேதி அன்று புதிய ஐபோன் மாடல்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WPf6t2O
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக