
கோவை: தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்குள் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் தெரிவித்தார்.
கோவையில் அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல் அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி இன்று நடந்த பரிசளிப்பு விழாவில், பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் பனாவத் வெங்கடேஷ்வரலு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''தமிழ்நாட்டில் 6,400 இடங்களில் பி.எஸ்.என்.எல் சேவை வழங்கப்படுகிறது. தற்போது 2ஜி இணைப்புகளை 4ஜி இணைப்புகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களில் 4ஜி வேகத்தில் இணையதள சேவை கிடைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1piV8hq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக