
புதுடெல்லி: 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவில் 55,844 கோடி ரூபாய் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூல் செய்யப்பட்டது என்று மாநிலங்களவையில், திமுக எம்பி கனிமொழி என்.வி.என் சோமு எழுப்பிய கேள்விக்கு, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை எவ்வளவு? அவ்வாறு வசூலிக்கும் தொகையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு பங்கு தரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: “நாடு முழுவதும் 48 ஆயிரத்து 452 கிலோமீட்டர் நீளத்துக்கு சுங்கச் சாலை உள்ளது. இவற்றில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து 983 சுங்கச் சாவடிகள் மூலமாக ஃபாஸ்ட் டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xcQpNfo
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக