
புதுடெல்லி: சொத்துகள் தொடர்பான நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.
இதன்படி, இண்டெக்சேஷனுடன் கூடிய 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரியும், இண்டெக்‌சேஷன் இல்லாத 12.5 சதவீத வரியும் நடைமுறையில் இருக்கும். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப இதில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை விற்கும் மக்களுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஆறுதலாக அமைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Q3wSd29
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக