offer for you

சனி, 31 ஆகஸ்ட், 2024

செப்.4-ல் திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடக்கம்

திருப்பூர்: வரும் 4-ம் தேதி திருப்பூரில் 3 நாள் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடங்குகிறது. இதன் மூலம், புவி மாசுபடாத ஆடை உற்பத்தி இலக்குகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பழங்கரையில் ஐ.கே.எஃப்.ஏ. வளாகத்தில் 51-வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி வரும் 4-ம் தேதி துவங்கி, 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை தக்கவைக்கவும், தொடர்ந்து மேம்படுத்தவும், 50 சர்வதேச பின்னலாடை கண்காட்சிகள் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து திருப்பூரில் நடத்தியுள்ளன. தற்போது 51-வது பின்னலாடை கண்காட்சி வரும் 4-ம் தேதி துவங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d0Uvxpo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now