offer for you

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

உலக அளவில் பணப் பரிவர்த்தனையில் முன்னணி: யுபிஐ மூலம் ஏப்ரல் - ஜூலை வரை ரூ.81 லட்சம் கோடி பரிவர்த்தனை

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் யுபிஐ மூலம் ரூ.81 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ரூ.20.6 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில், பே பால், சீனாவின் அலிபே, பிரேசிலின் பிக்ஸ்ஆகியவற்றைவிட யுபிஐ மூலம்அதிக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தப் பணப் பரிவர்த் தனைகளில் 40 சதவீதம் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பே செக்யூர் அமைப்பு வெளியிட்ட விவரங்களின்படி, யுபிஐ மூலம் வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீதம் அதிகம் ஆகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8xlMN7p
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now