
புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ சேவை தற்போது மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக மாலத்தீவு சென்ற நிலையில், அந்நாட்டில் யுபிஐ சேவை அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா பெரும் புரட்சி செய்துள்ளது. இன்றுஉலகில் நிகழும் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. இத்தகைய கட்டமைப்பை மாலத்தீவில் அறிமுகப்படுத்த தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். விரைவில் மாலத்தீவில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். இது மாலத்தீவின் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு செலுத்தும்” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uUYnoz2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக