offer for you

சனி, 3 ஆகஸ்ட், 2024

பிஎஸ்என்எல் பக்கம் மாறும் மக்கள் - சேவையைத் தடையின்றி கொடுக்க முடியுமா? | HTT Explainer

உலக அளவில் இரண்டாவது அதிக தொலைத்தொடர்பு பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், இந்தியாவில் தொலைத்தொடர்பு என்பது பெரும்பாலும் தனியார் நிறுவங்களைச் சார்ந்தே இருக்கிறது. சற்றே வசதி படைத்தவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்த முடியும் என்னும் நிலையை மாற்றும் நோக்கத்தில்தான் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) உருவாக்கப்பட்டது. ஆனால், 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தப் பின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவங்களின் ஊக்குவிப்பு இந்தியாவில் அதிகரித்தது.

ஜியோ அறிமுகம்: இந்தியாவில் முக்கியமான பணக்காரராக அறியப்படும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி ’ஜியோ’ என்னும் புதிய நெட்வொர்க்கை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். அதன்பிறகுதான் தனியார் நெர்வொர்க்கின் வளர்ச்சி இந்திய மார்க்கெட்டில் பெரும் உச்சம் தொட்டது. அதற்கு முன்பு ஏர்செல், ஏர்டெல், வொடஃபோன், ஐடியா போன்ற நெட்வொர்க்குகள் இருந்தாலும் கூட ஜியோ கொண்டுவந்த பிளான்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, குறைந்த கட்டணத்துக்கு அதிக ஜிபி-களை முதலில் அறிமுகம் செய்து பல கோடி வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்தது ஜியோ.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1jhdywV
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now