offer for you

சனி, 3 ஆகஸ்ட், 2024

ஆடிப்பெருக்கு: சிவகாசி பட்டாசு விற்பனை கடைகளில் பூஜையுடன் தீபாவளி விற்பனை தொடக்கம்

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு விற்பனை கடைகளில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டது. சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளும், 2,000-க்கும் அதிகமான சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 95 சதவீதத்துக்கும் மேல் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

சிவகாசி பட்டாசுகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாராளமாக கிடைத்தாலும், சிவகாசியில் 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாலும், நேரடியாக வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதாலும் தமிழகம் மட்டுமின்றி, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் சிவகாசி வருகின்றனர். தீபாவளி பட்டாசு விற்பனை ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று பூஜையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து பட்டாசு விற்பனை கடைகளும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாவளி விற்பனை தொடங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BuDvxpN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now