offer for you

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

‘310 மில்லியன் டாலர்கள் சுவிஸ் வங்கியில் முடக்கம்’ - ஹிண்டன்பர்க் தகவலை மறுக்கும் அதானி குழுமம்

சென்னை: பண மோசடி விவகாரத்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில் மொத்தமாக 310 மில்லியன் டாலர்கள் இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில், இதனை அதானி குழுமம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது ஹிண்டன்பர்க். இதனை சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கி வரும் ‘கோதம் சிட்டி’ என புலனாய்வு செய்தி வலைதளத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளதாகவும் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UEcw0pT
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now