
சென்னை: “குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறையில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட 5 திட்டங்களின் கீழ் ரூ.1,104.78 கோடி மானியத்துடன் ரூ. 2,993.97 கோடி வங்கி கடனுதவி வழங்கி 33 ,466 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்” என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செப்.18), ஒருங்கிணைந்த இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையான அசோசெம் சார்பில் நடத்தப்படும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: “முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டங்களாலும், சிறந்த நிர்வாகத்தாலும் தொழில் துறையில் இந்திய அளவில் தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் 9.07 சதவீதம் பங்களித்து 2 -ம் இடத்திலும், ஏற்றுமதியில் 9.5 சதவீதம் பங்களித்து 3 -ம் இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் 26.61 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு, 2 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்கி தேசிய அளவில் 2 -ம் இடத்தில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hv874Fo
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக