
கோவை: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை பஞ்சு மீது விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு ஆணைகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவ வேண்டும் என, மத்திய அரசுக்கு ‘சைமா’ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் டாக்டர். எஸ். கே.சுந்தரராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது ஜவுளித்துறை. பல சவால்கள் இருந்த போதிலும், உள்நாட்டு பருத்தியின் பலனாகவும், அரசு சரியான நேரத்தில் எடுக்கும் கொள்கை முடிவுகள் காரணமாகவும், ஜவுளித்துறை 6 சதவீத வளர்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய ஜவுளி வணிக அளவான 162 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 2030-ம் ஆண்டில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க தற்போதைய மூலப்பொருள் உற்பத்தி திறனான 5.5 பில்லியன் கிலோவிலிருந்து 20 பில்லியன் கிலோ அளவுக்கு மூலப்பொருட்கள் தேவைப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eZH0yd3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக