
புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 23-ம்தேதி நிலவரப்படி, 681.68 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரையில் 60 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
2023-ம் ஆண்டில் 58 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தது. 2022-ம் ஆண்டிலோ அந்நிய செலாவணி கையிருப்பில் 71 பில்லியன் டாலர் குறைந்தது. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை நிலையாக வைத்திருப்பதில் அந்நிய செலாவணி கையிருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால், நாட்டின் பொருளா தாரம் நெருக்கடிக்கு உள்ளாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HTvys4g
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக