offer for you

புதன், 25 செப்டம்பர், 2024

சென்செக்ஸ் 85,000, நிப்டி 26,000 - புதிய உச்சம் தொட்ட இந்திய பங்கு சந்தைகள்

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை நேற்று புதிய உச்சம் தொட்டது. நேற்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 85,000 புள்ளிகளைக் கடந்தது. நிப்டி 26 ஆயிரம் தொட்டது.

இது இதுவரையில் இல்லாத உச்சம் ஆகும். எனினும், நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சற்று இறக்கம் கண்டது. வர்த்தகமுடிவில் சென்செக்ஸ் 0.02% குறைந்து 84,914 ஆக நிலைபெற்றது. அதேசமயம், நிஃப்டி 0.01%உயர்ந்து 25,940 ஆக நிலைபெற்றது. 12 வாரங்களில் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளி களிலிருந்து 85 ஆயிரம் புள்ளி களுக்கு உயர்ந்துள்ளது. ஜுலை18-ம் தேதி சென்செக்ஸ் 81,000 புள்ளிகளைத் தொட்டது. ஆகஸ்ட்1-ம் தேதியில் 82,000, செப்டம்பர் 12-ம் தேதியில் 83,000, செப்டம்பர் 20-ம் தேதியில் 84,000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில் தற்போது 85,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YflDXeR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now