
ராமேசுவரம்: சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினசரி விமான சேவை அதிகரித்துளள நிலையில், மதுரையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவையை துவங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலி விமான தளத்துக்கு சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் இருந்து நடந்து வந்த விமான சேவை 1983ல் உள்நாட்டுப் போரால் நிறுத்தப்பட்டது. 1990ல் இலங்கை ராணுவத்தால் பலாலி விமான தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அதி உயர் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தப் பின்னர் பலாலி விமானத்தளமானது இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 17.10.2019ல் யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lps5wI8
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக