
நாகப்பட்டினம்: விருப்பமுள்ள மீனவர்களை, தொழில்முனைவோராக்க, முன் முயற்சி மேற்கொண்டு வருவதாக சோஹோ நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
சோஹோ பன்னாட்டு நிறுவனம் சார்பில் நாகை மாவட்டம் நம்பியார் நகர் மற்றும் ஆரியநாட்டுத் தெரு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் அந்நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, கோயில், சமுதாயக் கூடங்கள் மற்றும் வீடுகள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இதில், நாகை ஆரியநாட்டுத் தெரு மீனவ கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மூகாம்பிகை கோயிலின் கட்டுமானப் பணிகளை நேற்று இரவு சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டார். கோயிலுக்கு வந்த ஸ்ரீதர் வேம்புவை அப்பகுதி மீனவர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர பணிகள் குறித்து ஸ்ரீதர் வேம்பு கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YOs8HDU
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக