
உதகை: பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த நீலகிரி மாவட்ட ஆவின் நிறுவனம் அதிலிருந்து மீண்டு லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1985-ம் ஆண்டு அப்போதைய குடியரசு தலைவர் ஜெயில் சிங் இந்த நிறுவனத்தை திறந்து வைத்தார். கடன் சுமையால் லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் காலப்போக்கில் நஷ்டத்தை சந்தித்தது. நஷ்டத்திலிருந்து மீள முடியாததால், 350 நிரந்தர ஊழியர்களுடன் இயங்கி வந்த இந்த நிறுவனத்தில் தற்போது 50 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OwoGnyq
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக