
சென்னை: கடந்த 1999ம் ஆண்டு ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.1,700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு, ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையை ரூ.1,500 கோடி கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்யவும், புதிதாக இன்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவவும், கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் அத்தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் இரு மடங்காக உயர்ந்ததுடன், ஆண்டுக்கு 2.50 லட்சம் கார் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், 2022ம் ஆண்டு வெளியேறியது. குஜராத்தில் உள்ள உற்பத்தி மையத்தை டாடா நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால், தமிழகத்தில் உள்ள ஆலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, தன்வசமே வைத்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fX4RbIc
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக