
மதுரை: தீபாவளியையொட்டி மதுரை வாடிப்பட்டியில் கூடிய வாரச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் கூடுகிறது. இச்சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி ஆடு, மாடு கோழிகளும் விற்கப்படுவது வழக்கம். வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்தும், மதுரை, திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆட்டு வியாபாரிகள் இந்தச் சந்தைக்கு ஆடுகளை விற்கவும் வாங்கவும் வருவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FyPb91Z
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக