offer for you

வெள்ளி, 4 அக்டோபர், 2024

இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு

மும்பை: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சி அடைந்தன. இதனால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து 82,497-ல் நிலைபெற்றது. இதுபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 547 புள்ளிகள் சரிந்து 25,250-ல் நிலைபெற்றது. அனைத்து துறைகளின் குறியீட்டு எண்களும் சரிவை சந்தித்தன. ஒரே நாளில் 2 சதவீதத்துக்கு மேல் சரிவு ஏற்பட்டதால், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.9.78 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VJch8aR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now