
திருச்சி: திருச்சி - அபுதாபி இடையில் வாரம் 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் அக்டோபர் 25-ம் தேதி முதல் முற்றிலும் ரத்து செய்ய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் திருச்சி - அபுதாபி இடையே விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. வார நாட்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த இந்த விமான சேவை வளைகுடா நாடுகளுக்கு சென்று வரும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1m3CEQt
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக