
மும்பை: அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் சீன சந்தைகளின் பக்கம் திரும்பியதையடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றும் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
மந்த கதியில் உள்ள பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலான சலுகை திட்ட அறிவிப்புகளை சீன அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சீன மத்திய வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்களின் கவனம் சீன சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும், புவிசார் அரசியலில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க புள்ளிவிவர எதிர்பார்ப்பு ஆகியவையும் சந்தையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OuZXhaM
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக