offer for you

திங்கள், 14 அக்டோபர், 2024

கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.42 ஆக குறைந்தது

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து அதன் விலை கடந்த வாரம் கிலோ ரூ.60 வரை உயர்ந்தது. வெளி சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.90 வரை உயர்ந்தது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.42 ஆக குறைந்தது. சில்லறை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.100,அவரைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.46, கேரட், சம்பார் வெங்காயம் தலா ரூ.40, பச்சை மிளகாய், நூக்கல் தலா ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.30, வெண்டைக்காய், பாகற்காய் தலா ரூ.20, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.15, முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.10 என விற்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GL4lvq2
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now